Monday, March 8, 2010

ஒரே வழிதாண்ணே : சாமியார் சங்கம் ஆரம்பிக்கவும் !

ஒரே வழிதாண்ணே

சாதி சங்கம், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர் சங்கம், ஆசிரியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், செருப்பு தைப்போர் சங்கம், செருப்பு வாங்குவோர் சங்கம் (அதாங்க நுகர்வோர் சங்கம் ) ..அந்த சங்கம் ..இந்த சங்கம் போல, சாமியார்கள் சங்கம் ஆரம்பிச்சு பொழைக்கிறது தான் ...ஒரே வழி

வேலையே செய்யாத பேங்க சிப்பந்தியை யாராவது ஏன்னு கேக்க முடியுமா ? தொட முடியாது தொட ... அடுத்த நாளே ஸ்டிரைக்கு வெடிக்கும், சல்லிக்காசு கெடைக்காது

அர்சு காலேஜுக்கு வராத பையனை தட்டிக்கேட்டா .... முட்டி தட்டிடுவான்.

கோர்ட்டோ கச்சேரியோ, கல்லெறியும் வீரர்களை ஏதாவது செய்ய முடியுமா ? ஊ கூம்.. சத்தியமா முடியாது ... ஏன்னா சங்கம் இருக்கு

ரோட்டில தன்போக்குக்கு ஓட்டும் அரசுப்பேருந்து ஓட்டுனரை .... அசைக்க முடியாது... ஏன்னா சங்கம் இருக்கு. கேட்டியோ, நாளைக்கு ரோட்டில ஒரு வண்டி ஓடாது.

மீட்டருக்கு மேல ஆட்டோ டிரைவர் கேட்டாரா , இஷ்டம் இருந்தா ஆட்டோவில போ, இல்லையின்ன்னா "..கஸ்மாலம்..., கழுதைன்னு..." திட்டுவாங்கினாலும் இடத்தை காலி பண்ணணும்.... இல்லை .... வெய்யில் காலத்து தார் ரோடு மாதிரி நொந்து போயிடுவே... போலீஸ் கண்டுக்கவே கண்டுக்காது . சங்கம்...சங்கம் ....

நடிச்சா நடிகர் சங்கம், படம் பாத்தா ரசிகர் சங்கம், குடிச்சா alcoholics anonymous .... , தண்ணி வித்தா வியாபாரிகள் சங்கம்னு தெருவுக்கு தெரு , ஊருக்கு ஊர் சங்கம் இருக்குபோது, சாமியார்கள் மட்டும் சங்கம் இல்லாம இருந்தா எப்படீண்ணே ? , ஜீவனாம்ஸ கேஸ்ல மாட்டின புருஷனை மாதிரி லோல் பட வேண்டியதுதான்

No comments: