Thursday, March 18, 2010

பெண்களும் காசுமாலையும் ... மாயாவதியும் பண மாலையும்

Mayawati and her garland : Wearing a "kasumalai" as it was called those days was a fashion statement not political !!


அந்தகாலத்தில் பணகாரப் பெண்கள் காசுமாலை போட்டுக்கொண்டனர். Those were the times என்று பெரிசுகள் சொல்லக்கூடும் !!

தங்கத்தால் ஆன காசுகளை மாலையாய் தொடுத்து அணிவது செல்வத்தின், அந்தஸ்தின் அடையாளமாய் கருதப் பட்டது. மாலையின் சைஸ், எடை, மினுக்கும் விதம் என பல தரங்கள் இருந்தன.

கடந்த வாரத்தில் உத்திர பிரதேசத்தின் முதன் மந்திரி மாயாவதி கட்சி கூட்டத்தில் பண மாலை போட்டுக்கொண்டு இருக்கிறார்...அட என்னாங்க அதுவும் காசுமாலை தானே ... 1000 ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலை. நானே போடுக்கவில்லை, கட்சி அபிமானிகள், ஏழைகள் பலர் கொடுத்த பணம் இது என்கிறார் மாயா

ஆனால் நோட்டெல்லாம் மொட மொடன்னு புது நோட்டாக இருக்குது என்கிறார்கள் சிலர்

இவர் காசு மாலை போட்டுக்கொண்டது எதிர்கட்சிகளுக்கு நல்ல வாய்பாகிவிட்டது ... ஏழைகள் கஷ்ட்டப் படும் உத்திர பிரதேசத்தில் இதெல்லாம் வீண், அடம்பரம், ஊழல் என கத்த ஆரம்பித்துள்ளனர்... அது ஏன் ? இத்தனை நாள் கத்தியும் மாயாவை தேர்தலில் ஜெயிக்க முடியாததாலோ ?? எதிர்கட்சிகள் மாலையாக இல்லாமல் பெட்டியாக வைத்துள்ளதாலோ !! ? ?

மாயாவதி கவலைப்பட்டதாய் தெரியவில்லை . இரண்டாவது காசுமாலையும் ..சீச்சீ நோட்டு மாலையும் போட்டுக்கொண்டுவிட்டார் !!

காங்கிரஸ் முடுக்கி விட்டதாலோ, இல்லை ஞாய உணர்ச்சியாலோ, இப்போது வருமான வரித்துறை, மாயாவின் மாலை ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ளாது என்று கூறுகிறது. எல்லாம் insider source என்று சொல்லிகொள்கின்றனர், வருமான வரித்துறை !! யாருங்க அந்த inside source ? மாலை இன்ன எடை இருந்தது, அது 1000 ரூபாய் நோட்டுக்கள் ஆனால் இத்தனை கோடிகளாகும் என்றெல்லாம் சொல்லுது வருமான வரித்துறை !!

இந்த சந்தடியில் மாயா சில அதிகாரிகளையும், சில கட்சி முக்கியங்களையும் பதவி நீக்கம் செய்துள்ளார். மாயா தனக்கு கீழே இருக்கும் பிராமண அதிகாரிகளை உயர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு , தன் ஜாதிக்காரர்களையே முக்கிய அரசுப்பணிகளில் அமர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

Are the caste division comming out in the open ? Or Is this another case of caste rivalry stroked by jobless media looking for Ratings ?

The Brahmins and Dalits had joined hands in the last election to defeat the other parties in Uttar Pradesh, a formula well used by Mayavati. Probably the opposition is trying to break that unity in Uttar Pradesh.

இதுவும் வர்கப் போராட்டமாய் முடியுமோ ? இதற்கெல்லாம் அசைவார் என்று தோன்றவில்லை ....

காலம் பதில் சொல்லும்

Tags : Mayavathi, Mayavathi's second garland !, Was the Garland 5 crores or 21 lakhs ?? ? Brahmins being targetted ? Mayawati on sacking spree ?

2 comments:

Billo said...
This comment has been removed by the author.
Billo said...
This comment has been removed by a blog administrator.